10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20ஆம்
தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவும், நண்பகல் 12:00 மணிக்கு 10ஆம் வகுப்பு முடிவுகளும் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.